வியாழன், 20 ஜனவரி, 2011

திருவள்ளுவர்


திருவள்ளுவர் (Thiruvalluvar) Thirukkural in pdf

Thirukkural in tamil. Thirukkural download. thirukkural in pdf



திருவள்ளுவர் (thiruvalluvar), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர் எனக் கருதப்படுகிறார். திருக்குறளை இயற்றியவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக 
இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் 
ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. திருவள்ளுவரது 
இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. 
முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில் வாழ்ந்து வந்தார் 
என்றும் அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் நம்பப்படுகிறது.  


திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும்,  
முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. 
திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் 
என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் 
வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர்இலக்கியத்தைச் 
சேர்ந்தவை. திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் 
தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.

திருக்குறள்


திருக்குறள் 



திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது.மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.

அறத்துப்பால்


பொருட்பால்


காமத்துப்பால்


மொத்த இணைப்புகள்


அறத்துப்பால்

  • பாயிரம்
1. கடவுள் வாழ்த்து
2. வான் சிறப்பு 
3. நீத்தார் பெருமை 
4. அறன் வலியுறுத்தல்
  • இல்லறவியல்
5. இல்வாழ்க்கை | 6. வாழ்க்கைத் துணைநலம் | 7. மக்கட்பேறு
8. அன்புடைமை | 9. விருந்தோம்பல் | 10. இனியவை கூறல்
11. செய்ந்நன்றி அறிதல் | 12. நடுவுநிலைமை | 13. அடக்கம் உடைமை
14. ஒழுக்கம் உடைமை | 15. பிறன் இல் விழையாமை | 16. பொறை உடைமை
17. அழுக்காறாமை | 18. வெஃகாமை | 19. புறங்கூறாமை
20. பயனில சொல்லாமை | 21. தீவினை அச்சம் | 22. ஒப்புரவு அறிதல்
23. ஈகை | 24. புகழ்
  • துறவறவியல்
25. அருள் உடைமை | 26. புலால் மறுத்தல் | 27. தவம்
28. கூடா ஒழுக்கம் | 29. கள்ளாமை | 30. வாய்மை
31. வெகுளாமை | 32. இன்னா செய்யாமை | 33. கொல்லாமை
34. நிலையாமை | 35. துறவு | 36. மெய் உணர்தல்
37. அவா அறுத்தல்

பொருட்பால்

  • அரசியல்
39. இறைமாட்சி | 40. கல்வி | 41. கல்லாமை | 42. கேள்வி
43. அறிவுடைமை | 44. குற்றம் கடிதல் | 45. பெரியாரைத் துணைக்கோடல்
46. சிற்றினம் சேராமை | 47. தெரிந்து செயல்வகை | 48. வலி அறிதல்
49. காலம் அறிதல் | 50. இடன் அறிதல் | 51. தெரிந்து தெளிதல்
52. தெரிந்து வினையாடல் | 53. சுற்றம் தழால் | 54. பொச்சாவாமை
55. செங்கோன்மை | 56. கொடுங்கோன்மை | 57. வெருவந்த செய்யாமை
58. கண்ணோட்டம் | 59. ஒற்றாடல் | 60. ஊக்கம் உடைமை
61. மடி இன்மை | 62. ஆள்வினை உடைமை | 63. இடுக்கண் அழியாமை
  • அமைச்சியல்
64. அமைச்சு | 65. சொல்வன்மை | 66. வினைத்தூய்மை
67. வினைத்திட்பம் | 68. வினை செயல்வகை | 69. தூது
70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் | 71. குறிப்பு அறிதல் | 72. அவை அறிதல்
73. அவை அஞ்சாமை
  • அரணியல்
74. நாடு | 75. அரண்
  • கூழியல்
76. பொருள் செயல்வகை
  • படையியல்
77. படைமாட்சி | 78. படைச்செருக்கு
  • நட்பியல்
79. நட்பு | 80. நட்பு ஆராய்தல் | 81. பழைமை | 82. தீ நட்பு
83. கூடா நட்பு | 84. பேதைமை | 85. புல்லறிவாண்மை | 86. இகல்
87. பகை மாட்சி | 88. பகைத்திறம் தெரிதல் | 89. உட்பகை
90. பெரியாரைப் பிழையாமை | 91. பெண்வழிச் சேறல் | 92. வரைவில் மகளிர்
93. கள் உண்ணாமை | 94. சூது | 95. மருந்து
  • குடியியல்
96. குடிமை | 97. மானம் | 98. பெருமை | 99. சான்றாண்மை
100. பண்புடைமை | 101. நன்றியில் செல்வம் | 102. நாண் உடைமை
103. குடி செயல்வகை | 104. உழவு | 105. நல்குரவு | 106. இரவு
107. இரவச்சம் | 108. கயமை

காமத்துப்பால்

  • களவியல்
109. தகையணங்குறுத்தல் | 110. குறிப்பறிதல் | 111. புணர்ச்சி மகிழ்தல்
112. நலம் புனைந்து உரைத்தல் | 113. காதற் சிறப்பு உரைத்தல்
114. நாணுத் துறவு உரைத்தல் | 115. அலர் அறிவுறுத்தல்
  • கற்பியல்
116. பிரிவாற்றாமை | 117. படர் மெலிந்து இரங்கல் | 118. கண் விதுப்பு அழிதல்
119. பசப்பு உறு பருவரல் | 120. தனிப்படர் மிகுதி | 121. நினைந்தவர் புலம்பல்
122. கனவு நிலை உரைத்தல் | 123. பொழுது கண்டு இரங்கல் | 124. உறுப்பு நலன் அழிதல்
125. நெஞ்சொடு கிளத்தல் | 126. நிறை அழிதல் | 127. அவர் வயின் விதும்பல்
128. குறிப்பு அறிவுறுத்தல் | 129. புணர்ச்சி விதும்பல் | 130. நெஞ்சொடு புலத்தல்
131. புலவி | 132. புலவி நுணுக்கம் | 133. ஊடல் உவகை

பதிவிறக்கம் (Download)


திருக்குறள் தமிழில்

திருக்குறள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

உலாவுவோர்

பிரபலமான இடுகைகள்